வேளச்சேரி: மேடவாக்கத்தில் மேம்பால பணியின்போது 80 அடி உயரத்தில் இருந்து 100 கிலோ எடை கொண்ட இரும்பு தடுப்பு விழுந்ததில் அவ்வழியாக சென்ற மொபட் சேதமடைந்தது. இதில் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேடவாக்கம் பகுதி வேளச்சேரி மெயின் சாலையில் மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் பெரும்பாக்கம் மெயின் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஊழியர்களின் அலட்சியத்தால் 80 அடி உயரத்தில் இருந்து 100 கிலோ எடை கொண்ட இரும்பு சட்டம் கீழே விழுந்தது.