திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோமாங்குடி கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொன்மையான தட்சிணாமூர்த்தி சுவாமி கற்சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிலையை மீட்டு, ஊர்காட்டேரி என்ற இடத்தில் வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஐஜி, எஸ்பி உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் டிஎஸ்பி கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் தென்னரசன், லதா எஸ்ஐகள் செல்வராஜ், செந்தில்குமார், போலீசார் பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.