பேராவூரணி: பேராவூரணி அருகே காயமடைந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர். பேராவூரணி அருகே காலில் காயமடைந்த நிலையில் முட்புதரில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மயங்கி கிடந்தது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் சமூக ஆர்வலர்கள் மருதஉதயகுமார், மணிகண்டன், அருண் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த மயிலை மீட்டு பேராவூரணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடைத்துறை டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.