சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வாசகம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 5 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய முற்போக்கு தமிழர் கழகம், தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த சார்லஸ் வெற்றிவேந்தன், லயோலா மணி ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத சிலர், டெல்லி எரிந்தது, அடுத்து சென்னை எரிய வேண்டுமா? என்ற வாசகத்துடன் சிலர் பதாகைகளை ஏந்தி நின்றனர்.