ராஞ்சி: ஐசிசி உலகக் கோப்பை 2019 முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எவ்வித சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை. அவர் எப்போது மீண்டும் களத்துக்கு வருவார் என்று எதிர்த்த நிலையில், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கு அவர் தயாராகி வருகிறார். மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே - ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியைத் தொடங்க உள்ளார். இருப்பினும், தோனியின் முழு கவனமும் ஐபிஎல் 2020ல் உள்ளது. 2020ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு மீண்டும் தோனி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில், ‘தல’ தோனி விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.