தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ஹாங்காங் ஆயில் டேங்கர் கப்பலான எம்டி ஹன்னாவில் சுகாதார துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் வரும் அனைத்து கப்பல்களின் ஊழியர்களுக்கும் சுகாதார துறையினர் பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே கப்பல்கள் சரக்கு தளத்திற்கு வர அனுமதிக்கின்றனர்.இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்டி ஹன்னா என்ற ஆயில் டேங்கர் கப்பல் வந்துள்ளது. இந்தோனேசிய தீவான பாடம் துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 21 பேர் இருந்துள்ளனர்.