விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தார். இதனை அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங். தொண்டர்கள் சந்திரபாபு நாயுடு பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சந்திரபாபு நாயுடு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருந்தார்.