கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் 6,007 டி.எம்.சி. சென்னைக்கு வருகை

ஆந்திரா: கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் இதுவரை 6,007 டி.எம்.சி. கிடைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்சமாக 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் சென்னைக்கு கிடைத்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டது. விவசாயத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு தொடர்ந்து நீர் திறக்கப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: