லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் அளித்த வழக்கில், சமாஜ்வாடி எம்பி அசம்கான், அவரது மனைவி மற்றும் மகனை வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் மூத்த தலைவராகவும், எம்பி.யாகவும் இருப்பவர் அசம்கான். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இவருடைய மனைவி தாஜின் பாத்திமா ராம்பூர் தொகுதியிலும், மகன் அப்துல்லா அசம்கான் சோர் தொகுதியிலும் சமாஜ்வாடி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அப்போது, வேட்பு மனுவுடன் போலி பிறப்பு சான்றிதழ் அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.