சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை-கோவா அணிகள் மோத உள்ள முதல் அரை இறுதி முதல் கட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. நடப்பு ஐஎஸ்எல் சீசன் லீக் சுற்று முடிவுக்கு வந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அரை இறுதி உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் 2 கட்டமாக நடக்கிறது. சென்னையின் எப்சி - கோவா எப்சி அணிகள் மோதும் அரை இறுதியின் முதல் கட்ட ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப். 29ம் தேதி நடக்கிறது. சென்னை அணி முதல் 10 போட்டிகளில் 2 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்று தள்ளாடிக் கொண்டிருந்தது. பின்னர் புதிய எழுச்சியுடன் விளையாடிய அந்த அணி கடைசி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 டிரா என ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரை இறுதியை உறுதி செய்துள்ளது.