கடத்தூர் பகுதியில் ராகி நடவு பணி தீவிரம்

கடத்தூர்: கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ராகி நடவு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் சிறுதானிய பயிர்கள் பயிரிடுவது வழக்கம். தற்போது, பரவலாக ராகி சாகுபடி செய்து வருகின்றனர். ஒடசல்பட்டி, சில்லார அள்ளி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி. தா.அய்யம்பட்டி, ராமியண அள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாசி பட்டத்திரில் ராகி நடவு பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: