ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி கிராமத்தில் இராயர்குல வம்ச குரும்ப இன மக்களுக்கு சொந்தமான மகாலெட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடம்தோறும் சிவராத்திரிக்கு மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.