ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தக் கட்டண டிக்கெட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் கோயிலுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள், பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான ராமநாத சுவாமி கோயிலில் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். புனித நீராடலுக்கு ஒருவருக்கு ₹25 கட்டணம் பெற்று, கையில் அணியும் கைப்பட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கைப்பட்டைகளில் வரிசை எண் இல்லாத பட்டைகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கையில் கட்டி தீர்த்தமாடச் சென்ற பக்தர்களை, செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தினர். மொத்தம் 36 பேரிடம் கைப்பட்டைகளை பறிமுதல் செய்து, கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.இதையடுத்து, அனுமதி பட்டைகள் வழங்கப்படும் இடமான தீர்த்தக்கவுன்டரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு, வரிசை எண் அச்சிடப்படாத 180 கைப்பட்டைகளை கைப்பற்றினர். கவுன்டரில் பணியில் இருந்த கடைநிலை ஊழியர்கள் சந்தோஷ் மற்றும் பிரதாப் இருவரையும் விசாரணை செய்த கோயில் இணை கமிஷனர் இருவருக்கும் அபராதம் விதித்தார். தொடர்ந்து கைப்பட்டைகள் மொத்தமாக வைக்கப்படும் அறையிலும் சோதனை செய்யப்பட்டது. அங்கு வரிசை எண் அச்சிடப்படாத கைப்பட்டைகள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது சர்ச்சை தீர்த்த டிக்கெட் வழங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு: வரிசை எண் இல்லாமல் அச்சடித்து சுருட்டல்
- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புதிய மோசடி டிக்கெட் மோசடி புதியது
- தீர்த்த