திருச்சி: திருச்சி கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் அளித்த நூதன தண்டனையின்படி அரசு மருத்துவமனையை மாணவர்கள் சுத்தம் செய்தனர். திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் விடுதியில் தங்கி படித்த சீனியர் ஜூனியர் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் கிரிக்கெட் பேட், ஸ்டம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல்லூரி கேண்டீனில் இருந்த சோடா பாட்டில்களையும் எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் 28 பேரும், தாங்கள் சமாதானமாக செல்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.