சென்னை: கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியில் போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (20), நிஷாந்த் ராயல் (23), பாலச்சந்தர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 50 போதை மாத்திரைகள், 300 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 2.5 கிலோ கஞ்சா, 20 மேத்தன் பெட்டாமின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர்கள் கோவா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, சென்னையின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஒரு கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.