திருச்சி: பொன்மலை நார்த்-டி ரயில்வே காலனி பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட நாளாக இக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். திருச்சி பொன்மலையில் 80 வருடத்திற்கும் மேலாக ரயில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குடும்பத்திற்காக ரயில்வே சுற்றியுள்ள பகுதியில் குடியிருப்பு காலனிகள் உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு வசிப்பவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள், சுகாதார சீர்கேடுகள் என பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு.
பொன்மலை ரயில்வே காலனியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: தொற்று நோய் பீதியில் குடிமக்கள் அச்சம்
- தொற்றுநோய்
- பொன்னமலை ரயில்வே காலனி: குடிமக்கள்
- பொன்னமலை ரயில்வே காலனி: குடிமக்களின் அச்சத்தின் ஒரு தொற்றுநோய்