மனைவியை தகாத உறவுக்கு அழைத்ததால் ஆத்திரம்: கத்தியால் குத்தி ரவுடி படுகொலை: மற்றொரு ரவுடி கைது

தண்டையார்பேட்டை: மனைவியை தகாத உறவுக்கு அழைத்ததால் ரவுடியை கத்தியால் குத்தி கொலை செய்த மற்றொரு ரவுடியை போலீசார் கைது செய்தனர். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் குப்பன் (60). காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மாலைக்கண் செல்வம் என்பவரின் கூட்டாளியான இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.   இந்நிலையில், நேற்று மாலை காசிமேடு புதிய வார்ப்பு பகுதியில் குப்பன் நடந்து சென்றபோது, அங்கு வந்த 4 பேர், அவரை மறித்து தாக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை விடாமல் விரட்டி சென்ற மர்ம கும்பல், ஓடஓட விரட்டி சரமாரியாக  கத்தியால் குத்தி குத்தியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிய குப்பனை  மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராயபுரம் இந்திரா நகர் குடிசை பகுதியை சேர்ந்த ரவுடி அட்டு ரமேஷ்  (44) என்பவர் தனது கூட்டாளிகள் சம்பத் (25), ராகேஷ் (18), சந்தோஷ் (19) ஆகியோருடன் சேர்ந்து குப்பனை கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,  ரமேஷின்  மனைவியை தவறான உறவிற்கு குப்பன் அழைத்ததாகவும்,  இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், திட்டமிட்டு குப்பனை கொலை செய்ததும் தெரியவந்தது.இதேபோல் ரமேஷ், சம்பத் ஆகியோர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததை குப்பன், போலீசில் போட்டு கொடுத்ததால் ஆத்திரமடைந்து இந்த கொலை சம்பவத்தில்  ஈடுபட்டதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சம்பத், ராகேஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: