திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் தம்பி (63). லாட்டரி விற்பனை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் சக்தி லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தார். ஆனால், அவற்றில் 10 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதனால் அவர், கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில், லாட்டரி குலுக்கல் முடிவு வெளியானது. அதை பார்த்த தம்பி, மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். காரணம், அவரிடம் இருந்த விற்காத லாட்டரி சீட்டுகளில் ஒன்றுக்குதான் முதல் பரிசான ₹60 லட்சம் கிடைத்து இருந்தது. .
