சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இன்று (நேற்று) மநீம 3ம் ஆண்டின் தொடக்கம். 2 வருடங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்தபோது இருந்த அதே எழுச்சியும், வேகமும் இன்றும் இருக்கிறது. அரசியலை வெகுதூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, நான் கட்சி ஆரம்பித்ததும் சிறிதும் தயங்காமல் என்னுடன் கைகோர்த்து கட்சி வளர்க்கும் நிர்வாகிகள், களவீரர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். என் கனிவையும், கண்டிப்பையும் பொறுத்துக்கொண்டு 38 ஆண்டுகளாக என் நிழலிலும், எனக்கு நிழலாகவும் இருக்கும், என்றைக்கும் எனது அடையாளமாக இருக்கப்போகும் நற்பணி இயக்க தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.