வேலூர்: டிக், டாக்கில் பழகியவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட மனைவியை விவாகரத்து செய்ய கணவர் முடிவு செய்துள்ளார். வேலூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 2குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், டிக்டாக் செயலியில் பாடல், வசனம், நடனம் உள்ளிட்டவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது டிக், டாக் பதிவுகளை, வேலூரில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டத்தை சேர்ந்த திருமணமான 32 வயது வாலிபர், லைக், கமாண்ட் கொடுத்து பின் தொடர்ந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு எஸ்எம்எஸ் அனுப்பி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இளம்பெண், குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்துள்ளார்.