மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6வது சீசன் லீக ்போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கோவா, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் மும்பை 26 புள்ளி, சென்னை 25புளளி, ஓடிஷா 24புள்ளியுடன் காத்திருக்கின்றன. அந்த ஒரு இடம் யாருக்கு என்பது இன்று நடக்கும் மும்பை சிட்டி எப்சி-சென்னையின் எப்சி போட்டியில் தெரியலாம். மும்பை அணி இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 29 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்துவிடும். டிரா செய்தால் அரையிறுதி வாய்ப்பு குறைந்து விடும். சென்னை, ஓடிஷா அணிகளின் வெற்றித் தோல்விக்காக காத்திருக்க வேண்டும்.