மேலூர்: தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டாரத்தில் சின்ன கொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈடு தாக்குதல் காணப்படுகிறது. இந்த பூச்சியானது 2016ல் பொள்ளாச்சி பகுதியில் தென்பட்டது. வீரிய ஒட்டு ரகம் மற்றும் 4 முதல் 8 வயதுள்ள மரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.