சென்னை: அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் 38-வது அகில இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. கடந்த 37 போட்டிகளில் பங்கேற்காத தமிழ்நாடு காவல்துறை, இந்த ஆண்டு முதல்முறையாக பங்கேற்றது. துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்ஜய் தலைமையில் களமிறங்கிய தமிழக அணி 3 பதக்கங்கள் மற்றும் ஒரு கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக குதிரை ஏற்ற போட்டியில் பங்கேற்ற முதல் பெண் காவலர் என்ற பெருமையை தமிழக அணி வீராங்கனை சுகன்யா பெற்றுள்ளார். பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளை தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதி பராட்டினார்.