சேலம்: கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22666) இயக்கப்பட்டு வருகிறது. சேலம் வழியே செல்லும் இந்த ரயில் இன்று காலை 8 மணியளவில் சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே யார்டு பகுதியை கடந்து வந்தது.
5வது பிளார்ட்பாமில் நிறுத்துவதற்காக ரயில் சென்ற நிலையில் லோகோ பைலட் பிரேக் பிடித்துள்ளார். அப்போது டி5 பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறிகள் பறந்த நிலையில் கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அலறினர். பிரேக் பெயிலியர் பிரச்னையால் ஆக்ஸில் ஆயிலில் தீப்பிடித்தது. இதனால் உடனடியாக ரயிலை லோகோ பயிலட் நிறுத்தினார். ரயில் நின்றதும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனே அந்த இடத்திற்கு லோகோ பைலட் மற்றும் ஜங்ஷன் ரயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.