அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனாவில் இருந்து திரும்பிய ஓட்டல் உரிமையாளர் கோவிட்-19 தாக்குதலால் உயிரிழக்கவில்லை என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கோதைமங்கலத்தை சேர்ந்தவர் சக்திகுமார்(42). இவர் சீனாவில் ஓட்டல் நடத்தி வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற்றார். நோய் குணமாவதற்குள் சீனாவில் ஓட்டலில் ஆள் இல்லாததால் அங்கு சென்று ஓட்டலை கவனித்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 4ம் தேதி அவர் சொந்த ஊர் திரும்பினார்.