பெங்களூரு:கன்னட திரைப்படத்தில் பின்னணி பாடகி சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் இன்ஜினியரான சரத்குமார் என்பவருடன் நடந்தது. இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சரத் குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு சுஷ்மிதாவை அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு, சுஷ்மிதா அன்னபூர்னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.