புதுடெல்லி: 5,000க்கு கீழ் உள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் உற்பத்தியை கைவிட பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சாதாரண போன் வைத்திருப்பவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற ஈர்க்கும் வகையில் மலிவுவிலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றின் தொடக்க விலை 5,000க்கும் கீழ்தான் இருக்கும். முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்குவோர் பெரும்பாலும் இந்த மலிவு போன்களைத்தான் வாங்க துவங்கினர்.ஆனால், 4ஜி இலவச சேவை அறிமுகமான பிறகு, உயர்ரக ஸ்மார்ட்போன்களை நோக்கி மக்கள் நகர தொடங்கி விட்டனர். இதனால், மலிவு விலை போன்களின் தேவை குறைந்து விட்டது. இதுகுறித்து மொபைல் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது;கடந்த 2018ல், 5,000க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 25 சதவீதம் சரிந்து விட்டது. கடந்த ஆண்டில் இந்த சரிவு 45 சதவீதம் ஆகிவிட்டது. இந்த ஆண்டில் மேலும் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.