கடத்தூர்: சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை மற்றும் நல்ல விலை கிடைப்பதால், கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள், அதிகளவி–்ல் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒடசல்பட்டி, மணியம்பாடி, சில்லரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, ராமியணஅள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முள்ளிங்கியை விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது மார்க்கெட்டில் முள்ளங்கிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.