சென்னை: கோதாவரி ஆற்றின் உபரி நீரை தமிழக குண்டாறு வரை கொண்டு வரும் திட்டம், மதுரை-தூத்துக்குடி வர்த்தகப் பெருவழிச் சாலை போன்ற திட்டங்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்ட அறிக்கை: மகாராஷ்டராவில் பாயும் கோதாவரி ஆற்றில் உபரியாக கலக்கும் 1100 டிஎம்சி நீரை காவிரியில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை ரூ.60 ஆயிரம் கோடி செலவில் இணைப்பதற்காக தயாரித்த வரைவு திட்ட அறிக்கையை தமிழக அரசு பரிசீலித்தது.