திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்த புகாரில் 12 எழுத்தர்கள் டிஸ்மிஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதலில் முறைகேடு புகாரையடுத்து 12 பேரை பணியில் இருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்த புகாரில் 12 எழுத்தர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து திருவாரூர் ஆட்சியர் ஆனந்த் ஆணையிட்டுள்ளார். புகார்கள் குறித்து கடந்த 2 நாட்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தர வேறுபாடு, எடை குறைவு தெரிய வந்ததால் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: