டெல்லி: டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய அமைப்பில் ஒன்றாக டாஸ்மாக், மதுக்கடைகள் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு நடத்தக்கூடிய மதுக்கடைகள் மூலமாக 2019 - 20 நிதியாண்டில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பாலான பங்கு டாஸ்மாக் மூலமாகவே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அண்மையில் டாஸ்மாக் விலை ஏற்றத்தின் காரணமாக கூடுதலாக வரும் ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.