சென்னை: தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று மீண்டும் சவரனுக்கு 216 அதிகரித்தது. சவரன் 31,000ஐ தாண்டியது. அட்சய திருதியை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 29,880 ஆக இருந்தது. சில நாட்களிலேயே கிடுகிடுவென உயர்ந்து 31,000ஐ தாண்டியது. பின்னர் சற்று சரிந்து கடந்த 1ம் தேதி 31,376க்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களில் 288 சரிந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.