புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிதி மோசடிகள் தொடர்பாக சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் தகவல் கோரியிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 3 காலாண்டுகளில் 8,926 வங்கி நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1,17,463.73 கோடி மோசடி நடந்துள்ளது. இதனால் 18 பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கியில் 30,300 கோடி (4,769 வழக்குகள்) மோசடி நடந்துள்ளது.