டெல்லி : போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதையும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதையும் மத்திய அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்பட தெரிவித்துள்ளார். பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிக்குடா கூட்டுறவு என்னும் BIMSTEC அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டை இன்று புதுடெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அமித்ஷா, போதைப் பொருட்கள் கடத்தலால் BIMSTEC அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.