கடத்தூர்: கடத்தூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து தர்மபுரி- ஈரோடு, சிந்தல்பாடி, புட்டிரெட்டிப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.இந்நிலையில் இந்த சாலையோரங்களில் அமைந்துள்ள கடைகளுக்கு வருபவர்கள், தங்களது வாகனங்களை சாலையோரங்களிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.