சித்தூர்: கொரோனா தாக்கிவிட்டதாக பயந்து தனது தாயின் சமாதி அருகிலேயே விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சித்தூரில் பெரும் சோகததை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள சேஷமா நாயுடுகண்டரிக கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா(50). பாலகிருஷ்ணாவுக்கு மனைவி மற்றும், 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிள்ளார். அங்கு பாலகிருஷ்ணாவுக்கு ரத்த பரிசோதனை மருத்துவர்கள், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பாலகிருஷ்ணா தனது கிராமத்திற்கு சென்றார்.