புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இம்மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் என 40 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளனர். இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.