சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
- மாநில தேர்தல் ஆணையம்
- அரசு
- தேர்தலில்
- தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள்
- மாவட்டங்களில்
- தமிழ்நாடு
- தேர்தல் ஆணையர்
- மாநில தேர்தல் ஆணையம்