ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பாம்பேகேசில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒரு உடற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது. இந்த பயிற்சி நிலையம் துவக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே செயல்பட்டது. அதன் பின் மூடப்பட்டது. இந்த கட்டிட வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் பகுதியாக மாறியது. இதனைத்தொடர்ந்து. இந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள வலியுறுத்தி வந்தனர்.