புதுடெல்லி: மக்களவையில் நீண்ட நாட்களாக துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை என்பது தொடர்பாக குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்களவை துணை சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசமானது 22 அமர்வுகளாக இருந்தது. 12வது மக்களவையில் தான் 59 நாட்கள் என அதிக காலஅவகாசம் எடுக்கப்பட்டது. ஆனால் மோ-ஷா (மோடி மன்னர்) நம்பமுடியாத சாதனையை புரிந்துள்ளனர். 62 அமர்வுகள் முடிந்த பின்னரும் இன்னும் மக்களவை துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்ைல.