புதுடெல்லி: சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் மறுபரிசீலனை மனுவை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க முடியுமா என 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று ஆலோசனை நடத்துகிறது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த மனுவை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைப்பதாக கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை கூடுதல் நீதிபதிகளுக்கு பரிந்துரைக்க முடியுமா? 9 நீதிபதிகள் இன்று ஆலோசனை
- நீதிபதிகள்
- இடங்கள்
- பெண்கள்
- நீதிபதிகள் ஆலோசகர்
- கேட்டு
- மனுக்களை பரிசீலனை செய்யுங்கள்
- விசாரணை ரத்து மனுக்கள்