ஓசூர்: ஓசூர் பகுதியில் புதினா விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய தாலுகாவில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு மண் வளம் நல்ல ஈரப்பதத்துடன் காணப்படுவதால் காய்கறிகள், கீரை வகைகள், கொய்மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. ரோஜா, ஜெர்பரா, பட்டன்ரோஸ் மற்றும் செண்டுமல்லி, சாமந்தி மற்றும் கேரட், முள்ளங்கி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாத்திற்கு முன், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் புதினா பயிரிடப்பட்டுள்ளது.