டெல்லி : டெல்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 50% வாக்குகளுக்கு மேல் பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக டைம்ஸ் நௌ செய்தி நிறுவனம் களநிலவர ஆய்வு அமைப்பு Ipsos ஆகியவை இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 54-60 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 10-14 இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.