அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை கொங்காடை பகுதியை சேர்ந்தவர்கள் மாதேவன்(50), மாதன் (40). சகோதரர்களான இவர்கள் கோயில்நத்தம் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை காட்டுபன்றிகள் அழித்துவிடும் என்பதற்காக கன்னி வலையில் சுருக்கு வைத்திருந்தனர். இதில், எதிர்பாராதவிதமாக காட்டுபன்றி ஒன்று சிக்கியது. இதை, இருவரும் கொன்று சமைப்பதற்காக துண்டு, துண்டாக வெட்டியுள்ளனர்.