திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தெப்பல் உற்சவத்தையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர். தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று கோதண்டராம சுவாமி முத்துக்கவச அலங்காரத்தில், தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து ஜீயர்கள் முன்னிலையில் தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.