மதுரை: மதுரையில் குடிபோதையில் பைக் ஒட்டியவரிடம் அபராத தொகையை விட கூடுதலாக 500 ரூபாய் பணம் வசூலித்ததாக போக்குவரத்து தலைமைக்காவலர் மீது புகார் எழுந்துள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குள பகுதியில் போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் மற்றும் காவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த ஒருவரிடம் அபராத தொகையாக 10 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 500 ரூபாய் கேட்டு போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் அடாவடியாக பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.