கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலையடுத்துள்ள அறந்தாங்கியில் நைட் ஸ்டடி என கூறி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் கிருத்ஸ்துவ ஆலையம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் புனித அந்தோனியார் என்ற பெயரில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் பள்ளியின் விடுதியில் தங்கி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்பட்ட மரிய விக்டோ என்பவர் பள்ளி தாளாளராகவும் செயல்பட்டு வந்தார். பதவியேற்று சில நாட்களிலேயே பள்ளி விடுதி காப்பாளராக இருந்த 2 பேரை நீக்கிய அவர், விடுதி பொறுப்புகளையும் அவரே பார்த்து வந்தார். அவ்வப்போது விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை நைட் ஸ்டடி என கட்டாயப்படுத்தி வரவழைக்கும் பாதிரியார் மரிய விக்டோ மாணவிகளின் மீது பாலியல் ரீதியாக, அத்துமீறயதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனது அறையை சுத்தம் செய்ய வேண்டுமென வரவழைக்கும் மாணவிகள் அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாக சொல்லப்படுகிறது.