ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கிய நிலையில், தனுஷ்கோடி கடலோர பகுதியில் மணலில் 452 ஆமை முட்டைகள் வனத்துறையால் சேகரிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் ஆமைகள் பிப்ரவரி மாதம் துவங்கி தொடர்ந்து நான்கு மாதங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு வந்து மணலில் முட்டையிட்டு செல்லும். மன்னார் வளைகுடா கடலில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கியதால், நேற்று அதிகாலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கரைக்கு வந்த ஆமை ஒன்று மணலில் குழி தோண்டி முட்டையிட்டு சென்றது.