குன்றத்தூர்: சென்னை அருகே உள்ள மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). கடந்த சில மாதங்களுக்கு முன், தனது மனைவி பாண்டியம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதிக்கு குடி பெயர்ந்தார்.இந்நிலையில் நேற்று மாலை, இவரது வீட்டின் கதவை காரில் வந்த கும்பல் ஒன்று தட்டியது. முருகன் கதவை திறந்து வெளியே வந்தபோது வீட்டின் அருகே மறைந்து இருந்த ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத முருகன் நிலை குலைந்து நின்றார். உடனே அவரை சுற்றிவளைத்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு முருகன் ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.