சென்னை: வடபழனி முருகன் கோயில் பிளாட்பாரத்தை சேர்ந்தவர் வாசு (40). இவர், பூ கட்டும் வேலை செய்து வருகிறார். வடபழனி பக்தவச்சலம் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜானகிராமன் (40). இருவரும் தினமும் மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடிக்கும்போது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஜானகிராமன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாசுவின் கழுத்தை அறுத்தார். இதில் வலிதாங்க முடியாமல் வாசு அலறி துடித்தார்.